Monday, January 6, 2020



ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo


சோழவந்தான் படித்துறை சனீஸ்வரபகவான்.

நம்பி வந்தவரை வாழ வைக்கும் சோழவந்தான் சனீஸ்வரர் விசாகம் நட்சத்திரத்தின் அதிதேவதையாகும். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து மேற்கு திசையில் 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் வைகை நதிக்கரையில் மேற்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.

வழிபடும் முறை

விசாகம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வர வேண்டும். காலையில் நீராடி விட்டு விரதம் இருக்க வேண்டும். கோவிலுக்கு வந்தவுடன் அர்ச்சகரை சந்தித்து தனக்கு செய்ய வேண்டிய அர்ச்சனை, பரிகார பூஜைகளுக்கு ஏப்பாடு செய்ய வேண்டும்.

இந்த கோவிலில் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது. சனீஸ்வர பகவானுக்கு எள், கருப்பு துணி, வெள்ளைப்பூ பிச்சிப்பூ முல்லைப்பூ ஆகியவை விசேஷம். தேங்காய், பழம் மற்றும் பூஜைப்பொருட்களை கொடுத்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். அர்ச்சகர் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் உட்கொள்ள வேண்டும். மதியம் கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும். எள் சாதத்தை காகத்துக்கு படைக்க வேண்டும். பரிகாரம் செய்யக்கூடியவர்கள் சன்னதியில் 9 எள் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். மற்றபடி பக்தர்கள் ஒரு விளக்கு ஏற்றி வழிப்பட்டாலே போதும். பின்னர். மாலையில் விரதத்தை முடிக்கும் போது 9 விளக்குகள் ஏற்றி வைத்து பகவானை வணங்கி சன்னதியை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

மிளகு சீரகம் அதிகம் போட்டு தயாரித்த வெண் பொங்கல் நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட வேண்டும். பின்னர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

சனிக்கிழமைகளில் நெய் அல்லது எள் விளக்கேற்றி, எள் சாதத்தை அன்னதானம் வழங்கினால் சனி கிரக பாதிப்புகள் குறையும். தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

மூன்று மாதம் விசாக நட்சத்திரத்தன்று சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம்செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சுயம்பு சனீஷ்வரரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். சனி தசை, ஏழரைச்சனி, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் பூஜை செய்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடுவர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை. பால், தயிர், திரவியப்பொடி, நல்லெண்ணெய், வில்வப்பொடி, மஞ்சள்பொடி, தேன், சந்தனம், பன்னீர், இளநீர், அரிசிமாவு ஆகியவற்றால் அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo


மதுரையிலேயே

பஞ்சபூதத் தலங்கள்

உள்ளதை நம்மில் பலபேர்

அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆம் ""

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை ஊதா பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

.அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.




ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo


ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo

 இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.

நீரில்‌ பாசி படிந்து நின்றது போல்‌ நம்‌ மேல்‌ படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின்‌ பாதம்‌ தொழுது ஒரு உபாயம்‌ கூறுகிறேன்‌ என்கிறார்‌ அகத்தியர்‌ பெருமான்‌.

சாபமது நிவர்த்தியாக நீ மகனே சொல்லுகிறேனன்றாய்க் கேளு பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்துபாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே சொல்லிடுவாய் தினம் நூத்தி யிருபத்தெட்டு சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் “.
.
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும்‌ சூரிய பகவானை வணங்கி ஓம்‌ கிலி சிவஎன்ற மந்திரத்தை 128 முறை செபிக்க வேண்டும்‌. இப்படி ஒரு மண்டலம்‌ எனப்படும்‌ 48 நாட்கள்‌ தொடர்ந்து செபித்து வர நம்மை உடும்பு போல்‌ பற்றி நின்ற சனீஸ்வர தோஷம்‌ விலகி விடும்‌. ஓது ஏராளமானோர்‌ செய்து பயனடைந்த முறையாக உள்ளது. இந்த 48 நாட்களும்‌ மது, மாது, மாமிச உணவு, தீய சொற்களை பேசுவது போன்றவற்றை அறவே தவிர்த்து, மந்திர உச்சாடனம்‌ செய்யும்‌ பொது நிச்சயமான பலனை கொடுக்கும்‌. மேலும்‌ 48 நாட்கள்‌ முடிந்த பின்பு ஒருமுறை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்‌ கோயில்‌ அல்லது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்‌ கோயில்‌, குச்சனூர்‌ சனீஸ்வரன்‌ கோயில்‌ போன்றவற்றிற்கு சென்று சனி பகவானை வழிபாடூ செய்வது நன்று.
கீழே உள்ள அட்டவணையின்  படி பைரவருக்கு தீபம் ஏற்றி வந்தால் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ளலாம் ...

Day
Time
Saturday
5.30 pm to 6 pm
Sunday
7.45 am to 8 am
Monday
8.30 pm to 9 pm




ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo