Monday, January 6, 2020



ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo

 இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.

நீரில்‌ பாசி படிந்து நின்றது போல்‌ நம்‌ மேல்‌ படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின்‌ பாதம்‌ தொழுது ஒரு உபாயம்‌ கூறுகிறேன்‌ என்கிறார்‌ அகத்தியர்‌ பெருமான்‌.

சாபமது நிவர்த்தியாக நீ மகனே சொல்லுகிறேனன்றாய்க் கேளு பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்துபாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே சொல்லிடுவாய் தினம் நூத்தி யிருபத்தெட்டு சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் “.
.
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும்‌ சூரிய பகவானை வணங்கி ஓம்‌ கிலி சிவஎன்ற மந்திரத்தை 128 முறை செபிக்க வேண்டும்‌. இப்படி ஒரு மண்டலம்‌ எனப்படும்‌ 48 நாட்கள்‌ தொடர்ந்து செபித்து வர நம்மை உடும்பு போல்‌ பற்றி நின்ற சனீஸ்வர தோஷம்‌ விலகி விடும்‌. ஓது ஏராளமானோர்‌ செய்து பயனடைந்த முறையாக உள்ளது. இந்த 48 நாட்களும்‌ மது, மாது, மாமிச உணவு, தீய சொற்களை பேசுவது போன்றவற்றை அறவே தவிர்த்து, மந்திர உச்சாடனம்‌ செய்யும்‌ பொது நிச்சயமான பலனை கொடுக்கும்‌. மேலும்‌ 48 நாட்கள்‌ முடிந்த பின்பு ஒருமுறை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்‌ கோயில்‌ அல்லது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்‌ கோயில்‌, குச்சனூர்‌ சனீஸ்வரன்‌ கோயில்‌ போன்றவற்றிற்கு சென்று சனி பகவானை வழிபாடூ செய்வது நன்று.
கீழே உள்ள அட்டவணையின்  படி பைரவருக்கு தீபம் ஏற்றி வந்தால் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ளலாம் ...

Day
Time
Saturday
5.30 pm to 6 pm
Sunday
7.45 am to 8 am
Monday
8.30 pm to 9 pm




ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo

No comments:

Post a Comment